ஒன்றிய அரசு புதிதாக நிறைவேற்றிய மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் வாங்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர். மோகன் தலைமை வகித்தார். பொருளாளர் ஆர். கனகராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், எம்.ஆறுமுகம் மற்றும் பலர் பேசினர்.