இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமைகளுக்கான பாதுகாப்போர் நல சங்கத்தின் சார்பில் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாயன்று (ஜூன் 20) நடைபெற்றது. இந்த இயக்கத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆளவந்தார் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் வீரமணி, வி.அரிநாராயணன், எஸ்.ரவி, என்.ஜெயபால், எஸ். சுந்தரபாண்டியன் ஆர். கனகராஜ், எஸ்.பி.அப்துல் ஹமீத், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.