பட்டியலின மற்றும் சிறுபான்மையின பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கக் கோரி திருவண்ணாமலை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சங்கத்தின் பொதுச் செயலாளர் எம். வீரபத்திரன், நிர்வாகிகள் செல்வி, கௌரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.