districts

img

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின சார்பில்   மனு கொடுக்கும் போராட்டம்  

கரும்பு பண நிலுவை பாக்கி தொகை ரூ 26 கோடி வட்டியுடன் பெற்றுத் தரக்கோரியும் தரணி சர்க்கரை ஆலை  2 ஐ, தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின சார்பில்  மனு கொடுக்கும் போராட்டம்   நடைபெற்றது.  தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தரணி ஆலை 2ன் தலைவர் எஸ்.பாண்டுரங்கன் தலைமை தாங்கினார்,   மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் , விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் டி.கே.வெங்கடேசன்,  பண்ணாரி ஆலை செயலாளர் பலராமன், தரணி ஆலை 2 ன் செயலாளர் பாலமுருகன், விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ப.செல்வன்,  சிபிஎம் மாவட்ட செயலாளர்  எம்.சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;