ராணிப்பேட்டை, நவ. 21 - ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகாவில் உள்ள மேல்நெல்லி கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இருளர் இன மக்கள் பல ஆண்டுகளாக வீட்டு மனைக்கு பட்டா இல்லாமல் வசித்து வருகிறார்கள். எனவே,வீட்டுமனை பட்டா கேட்டு கலவை வட்டாச்சியரிடம் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி தலைமையில் திங்களன்று (நவ. 20) மனு கொடுத்தனர். இதில் கட்சியின் கலவை தாலுகா செயலாளர் எஸ். கிட்டு, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவர் கே. சேகர்,செயலாளர் ஆர். வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.