திருவொற்றியூர் 4ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உயர் அழுத்த மின்கம்பங்களை அகற்றி புதைவட கேபிள் அமைத்துத்தரக் கோரி மின்வாரிய சென்னை வடக்கு மேற்பார்வை பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் மனு அளித்தார். பகுதி குழு உறுப்பினர் கே வெங்கட்டையா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பாக்கியம், கிரிஜா நகர் கிராம சங்க செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.