districts

img

100 நாள் வேலை அட்டை கேட்டு மனு

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாணாவரம் பகுதியில் சுமார் 70 குடும்பங்களை சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக 100 நாள் வேலை செய்வதற்கான பணி ஆணை வழங்காமல் அலைக்கழிக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் மீது   நடவடிக்கை எடுக்கக்கோரி காவேரிப்பாக்கம் ஒன்றிய அலுவலகத்தில் விவசாய தொழிலாளர்கள் புகார் மனு அளித்தனர். அப்போது கிளைத் தலைவர் வளர்மதி, மாவட்டத் தலைவர் டி. சந்திரன், செயலாளர் பி. ரகுபதி, துணைத் தலைவர் கே. சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.