மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கண்டித்து சிஐடியு சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. பாரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே. நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.