கடலூர், டிச.13- கடலூர் மாநகரம், வண்டி பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் பெருமாள் துணைவியார் தோழர் பருவதாம்பாள் காலமானார். அவருக்கு வயது 74. மாதர் சங்கத்தின் தலைவர்கள் ஒருவரான அம்பிகாவின் தயாரான பருவதாம்பாள் உடலுக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பராயன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஆர்.ஆளவந்தார், எஸ்.கே.பக்கீரான் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.