கிருஷ்ணகிரி,ஆக.23-
கிருஷ்ணகிரி பழைய பேட்டை நேதாஜி சாலையில் கடந்த மாதம் 29ம் தேதி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
15 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சரயு ஆணையின் பேரில் அனைத்து பட்டாசு சில்லரை விற்பனை கடைகளில் வருவாய்த்துறையினர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.அதன் அடிப்படையில், அரசு விதிமுறைகளுக்கு மாறாக பட்டாசு கடை நடத்தி வந்ததாக 48 கடைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. மரக்கடை, வெல்டிங் கடை, குடியிருப்புகள்,இரும்பு மர பொருள்கள் விற்கும் கடைகள், வணிக வளாகங்கள்,உணவகங்கள், தனியார் மருத்துவமனைகள், போதிய பாதுகாப்பற்ற, அவசர விபத்து காலங்களில் வெளியேற போதிய வசதிகள் இல்லாத நிலையில் செயல்பட்டு வந்த பட்டாசு மொத்த, சில்லரை விற்பனை கடைகளுக்கு காவல் துறையால் வழங்கப்பட்ட தடையின்மை சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது. வருவாய்துறை சார்பிலும் பட்டாசு கடைக்களில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அரசு அலுவலர்கள் கூறினர்.