திருத்தணி அருகே வீரகநல்லூர் ஊராட்சி பகத் சிங் நகர் இருளர் காலனியில் மக்கள் ஒற்றுமை சமத்துவ கிறிஸ்துமஸ் பிறப்பு விழா நடைபெற்றது. மலைவாழ் மக்களுடன் கிரண் பவுண்டேசன் இயக்குநர் பீகாக் மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் ஸ்ரீ கிரண் பங்கேற்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் என 100 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புத்தாடைகள் வழங்கி விருந்து வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் காதர் பாஷா, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் அந்தோணி ஆகியோர் பங்கேற்றனர்.