districts

img

புயல் மையத்தில் மக்கள் தஞ்சம்: படகில் சென்று ஆட்சியர் ஆறுதல்

சிதம்பரம், செப். 1- காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. ஆணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப் படும் வெள்ள நீர் கல்லணை மற்றும் கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலில் கலக்கிறது. இதில் கும்பகோணம் அருகேயுள்ள கீழணையில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் இரு கறைகளை யும் வெள்ளநீர் தொட்ட வாறு செல்கிறது. சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கடை கோடி கிராமமாக உள்ள ஜெயங்கொண்டபட்டினம், அக்கறை ஜெயங்கொண்ட பட்டினம், எருக்கன் காட்டுப்படுகை, கீழ குண்டலப்பாடி, உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட  கிராமப் பகுதிகளின்  வயல் வெளி கள் மற்றும் பொதுமக்களின் குடியிறுப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி கட்டி டம், ரேசன்கடை உள்ளிட்ட வைகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

வெள்ளநீர் வருவதை முன்கூட்டியே மாவட்ட நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப் பட்டது. மேலும் தற்போது தண்ணீர் சூழ்ந்த வீடுகளில் உள்ள பொதுமக்களை அப்பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் வியாழ னன்று (செப்.1) அக்கறை ஜெயங்கொண்ட பட்டினம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் பால சுப்பிரமணியன் படகு மூலம் சென்று புயல் பாது காப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.   தண்ணீர் வடியும் வரை இங்குள்ள மக்களுக்கு  தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அந்த பகுதி யில் உள்ள மக்கள் சிலர் குடிசை வீடுகளில் வசிப்ப தாகவும் அதனை கான்கீரிட் வீடுகளாக கட்டிதரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனைத் தண்ணீர் வடிந்த வுடன் செய்து கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். சிதம்பரம் கோட்டாட்சி யர் ரவி, வட்டாட்சியர் ஹரி தாஸ், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் காந்த ரூபன் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.