கிருஷ்ணகிரி, ஜூலை 29-
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தவறிய ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து தேன்கனிக்கோட்டையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லெனின் முருகன் வரவேற்றார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் முன்னிலை வகித்தார்.
அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டினா , இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அப்துல் ரகுமான், எஃப் எம்பிஎஸ் சபையின் ரெவெரென்ட் ஜெபராஜ், ஜமாத் உலமா தலைவர் மௌலானா நயிம் ஜான், விசிக மாநில துணைச் செயலாளர் சக்திவேல், ஏஐஎம்ஐஎம் வட்ட தலைவர் சித்திக், சிபிஐ நகர செயலாளர் சேகர், திமுக நகர செயலாளர் டி.ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.