districts

img

சொந்த வீடு இல்லாத அரசம்பட்டி மக்கள்

கிருஷ்ணகிரி,நவ.30-  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ளது அரசம்பட்டி ஊராட்சி மன்றம். இங்குள்ள காந்திபுரம் கிராமத்தில் பட்டியலினம் உள்பட 1000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்க ளில் பெரும் பகுதியினர் கடந்த 20 ஆண்டு களாக சொந்த வீடு,நிலம் இல்லாமல் விவசாய கூலி வேலைகள் செய்து வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். எனவே, தங்களுக்கு இலவசமாக வீட்டுமனை, வீடு கேட்டு வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் தனித்தனியாக பல முறை மனு கொடுத்துள்ளனர். இது வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.  இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர்கள் மகாலிங்கம், கலைமணி,விவசாயிகள் சங்க தலைவர் கந்தன் ஆகியோர் கூறுகை யில், “ இலவச வீடு, வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் வீடு, நிலம் இல்லாமல் தவிக்கும் குடும்பங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியிருக்கிறோம். அடுத்து கட்டமாக போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.