காஞ்சிபுரம், நவ.30 - காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை யானது கொட்டிதீர்த்து வரு கிறது. இதனால் தாழ்வான பகுதிகளிலே மழைநீர் ஆனது ஆங்காங்கே தேங்கி யுள்ளது. இந்த நிலையிலே காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர்மேடு அருந்ததிபாளையம் பகுதியில் மழை நீரானது சுமார் 2 அடி உயரத்திற்கு சூழ்ந்துள்ளது. மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளிவர முடியாது தவித்து வருகின்றனர். மேலும் அதனுடன் கழிவுநீரும் கலந்து துர்நாற்றமான வீசி சுகாதார சீர்கேடானது ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போதும் பருவ மழை அல்லாத நாட்களில் கன மடையின் போதும் இப்பகுதி யிலேயே மழை நீர் ஆனது தேங்குவதும், அதனுடன் கழிவு நீரும் கலந்து தேங்கு வது வாடிக்கையாகவே இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். மேலும் தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ள நிலையிலே தொடந்து கனமழை பெய்தால் இப்பகுதியி லேயே மேலும் மழைநீரா னது வரக்கூடும் அப்படி வரும் பட்சத்தில் வீடுகளி னுள் மழைநீர் புககூடும் இதனால் இரவு நிம்மதியாக தூங்க கூட முடியாத நிலை உள்ளதாக என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.