districts

img

டெங்கு தடுப்புக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியர்

விழுப்புரம்,செப்.15- விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென ஆட்சியர் பழனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  விழுப்புரம் தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள் ளது. அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு உடல்நலம் விசாரித்தார். அப்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததோடு, உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தினார். சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் மரு. லட்சுமணன், தலைமை மருத்துவ அலுவலர் மரு. லதா உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.