districts

திருவண்ணாமலை நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்

திருவண்ணாமலை, ஜூன் 11-

     கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்படுவதால் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.   

     தமிழ்நாட்டில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12 அன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. மேலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் 14 ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கவுள்ளது.

    கோடை விடுமுறைக்கு வெளியூர்களுக்கு உறவினர்கள் வீட்டிற்கும், சுற்றுலாவிற்காக பல்வேறு பகுதிகளுக்கு சென்றவர்கள் தங்கள் வீடு திரும்பி பள்ளிகளுக்கு செல்ல தயார் நிலையை உள்ளனர். இதனால், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. பேருந்துகளில் இடம் பிடிக்க தங்கள் குழந்தைகளுடன் ஓடி, ஓடி சென்று இடம் பிடித்தனர்