திருவண்ணாமலை,ஜூன் 19-
திருவண்ணாமலையை அடுத்த புனல் காடு, தேவனந்தல் மூல குன்று மலை அடி வாரத்தில், திருவண்ணாமலை நகரம், அடி அண்ணாமலை, வேங்கிக்கால் ஆகிய பகுதிகளில் சேகரமாகும் குப்பை மற்றும் திடக்கழிவுகளை கொட்ட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சியை எதிர்த்து கிராம மக்கள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மே 13 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 16 நாட்கள் ஒப்பாரி வைத்தும், தலைகீழாக நின்றும், கஞ்சி காய்ச்சி குடித்தும் தினமும் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு ஆகி யோர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, குப்பை கொட்டு வதற்கு மாற்று இடம் தேர்வு செய்து அங்கு குப்பை கொட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்திருந்தனர்.
இந்த நிலையில், திங்களன்று (ஜூன் 19) புனல்காடு மலையடிவாரத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி காவல்துறை பாது காப்புடன் மீண்டும் தொடங்கியது. இதை யறிந்த கிராம மக்கள், அந்த இடத்தை முற்றுகையிட்டனர்.
குப்பை கிடங்கு அமைதப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அருகே நிலத்தில் இருந்த 200 அடி ஆழ முள்ள கிணற்றில் குதித்து இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்ற னர்.
உடனடியாக அந்த பெண்களை காப்பாற்றிய கிராமமக்கள், திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவர்களுக்கு நீச்சல் தெரியாது. கிராம மக்கள் துரிதமாக செயல்பட்டதால், இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். இதையடுத்து குப்பை கிடங்கு அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.