districts

img

அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்: அரணாய் நிற்கும் செங்கொடி இயக்கம்

பூர்வீகமாக விவசாய தொழிலை பின்னணியாக பெற்றுள்ள திருவண்ணாமலை மாவட்ட  விவசாய குடும்பங்கள், விவசாய  தொழிலை தொடர முடியாமல், விவசாய நிலங் களை விற்பனை செய்துவிட்டு, நில விற்பனை புரோக்கர்களாகவும், நில மில்லாத ஏழை கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினர், அமைப்புசாரா தொழி லாளர்களாக அன்றாடம் கிடைக்கும் வேலையை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில், பழங்குடியின மக்கள் நிலம், விவசாயம் சார்ந்தே வாழ்ந்து வந்தனர். விவசாயம் அருகிய பின்னர், அத்துக்கூலிகளாகவும், செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாகவும், செம்மரம் வெட்டுதல் போன்ற குற்றக் கூலிகளாகவும் மாறவேண்டிய நிலை ஏற்பட்டது. 

பெயரோ பூர்வகுடி,  வசிப்பதோ ஏரிக்கோடி

திருவண்ணாமலை மாவட்டத்தின் பூர்வகுடிகளாக வாழ்ந்த பழங்குடியின மக்கள், வசதியான, நிலம்படைத்த பிற  சாதியினர் ஊர் அமைப்பை ஏற்படுத் திய போது, குடியிருக்க இடமின்றி பழங் குடியின மக்கள் ஊரைவிட்டு வெளி யேறி, ஏரி, குளம், குட்டை அருகில் வசித்து வந்தனர்.  வன விலங்குகளை போல பிற சாதி மக்களிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டட பழங்குடியினரை ஊருக்குள், நகருக்குள் சமமாக வாழ வைக்க வேண்டும் எனறு எண்ணாத பல கட்சிகள் இருக்க, காலம், காலமாக பழங்குடியின மக்களுக்கு ஆதர வாகவும், பாதுகாவலனாகவும் செங்கொடி இயக்கம் செயல்பட்டு வரு வதாக திருவண்ணாமலை மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.       உதாரணமாக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் கீழ் குவ ளைவேடு, செய்யாறு வட்டம் கொடநகர், சேத்துப்பட்டு வட்டம் மரக்கு ணம், பெரிய கொழப்பலூர், வெம்பாக் கம் வட்டம் அரியூர், பெருங்கட்டூர், உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் அடிப்படை வசதியின்றி பல ஆண்டுகளாக தவித்து வந்தனர். அவர்க ளுக்கு  சாதி சான்று,  வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், தொகுப்பு வீடுகள்  வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 14 ஆம் தேதி செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தியதின் விளை வாக, சாதிச்சான்று,மனைப் பட்டா வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் உறுதி யளித்தது. இதேபோல், பெரண மல்லூர், சேத்துப்பட்டு, தண்ட ராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பழங்கு டியினருக்கு ஆதரவாகவும், பஞ்சமி நிலங்களை மீட்க பட்டியலின மக்களுக்கு ஆதரவாகவும் செங்கொடி இயக்கம் களத்தில் நின்று போராடி வருகிறது.