ஈரோடு, ஜன. 3- காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நலப்பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரத்தோடு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இறந்த பணியா ளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஆணைகள் உடனடியாக வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப் பின்படி சலுகைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தெய்வசிகாமணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் முடி வில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக் கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.