districts

img

தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் மக்கள் குறைதீர் கூட்டங்கள் ரத்து

செங்கல்பட்டு, மார்ச்.18-  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 16.3.2024 தேதி முதல் ஜூன் 4 தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறை கள் நடைமுறையில் உள்ளதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம், மனுநீதிநாள் முகாம், விவசாய குறை தீர்வு கூட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மருத்துவ முகாம் ஆகியவைகள் நடைபெறாது என்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவல கங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை, அதற்கென்று வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் சேர்ப்பிக்குமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.