கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர், விதவை, ஆதரவற்றோர் உதவித் தொகை, வீட்டுமனை பட்டா, சாலை வசதி, தொழில் தொடங்க கடன் உதவி, ஏரி மற்றும் குளம் தூர் வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 415 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.