திருவள்ளூர்,மே 11-
திருக்கண்டலம் ஊராட்சி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் உறுதியளித்ததால் பூட்டு போடும் போராட்டம் கைவிடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக் கண்டலம் ஊராட்சியில் கிராம நிர்வாக அதிகாரியாக கிருஷ்ணகுமார் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், இவர் சிலருக்கு இறப்பு சான்று தராமல் நீண்ட நாட் களாக நிலுவையில் வைத்து ள்ளதாகவும், பட்டா கேட்டு மனு செய்தால் பெல்ட் ஏரியா என்று கூறி அதனையும் நிலுவையில் வைத்து விடு வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில்,திருக்க கண்டலம் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகத் திற்கு வெள்ளியன்று (மே-12), காலை பூட்டு போடும் போராட்டம் விவசாயிகள் சங்க திருவள்ளூர் மாவட் டத் துணைத் தலைவரும், ஒன்றிய குழு உறுப்பினரு மான பி.ரவி தலைமையில் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில், வியாழனன்று (மே-11), காலை ஊத்துக்கோட்டை துணை வட்டாட்சியர் டில்லி ராணி,வருவாய் அலுவலர் சரவணன்,கிராம நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் ஆகியோர் திருக்கண்டலம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்துக்கு வந்தனர்.
இதனை அறிந்த ஏராள மான பொதுமக்கள் வரு வாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மதன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் பெ.ரவி ஆகி யோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். இதில், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இறப்பு சான்று குறித்து உயர் அதிகாரி களிடம் பேசி உரிய நட வடிக்கை எடுக்கப்படும், பெல்ட் ஏரியாவில் பட்டா கேட்டவர்களுக்கு சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப் படும், நாள்தோறும் கிராம நிர்வாக அதிகாரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் அலுவலகத்திற்கு வருவார் என்று துணை வட்டாட்சியர் டில்லி ராணி உறுதி கூறினார். இதனை தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.