districts

img

ரயில்வே மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்பிடுக பெரம்பூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, அக். 17- ரயில்வே மருத்துவமனையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயூ), தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியன் (டிஆர்பியூ) சார்பில் பெரம்பூரில் உள்ள புதிய மருத்துவமனை அருகே செவ்வாயன்று (அக். 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நோயாளிகளின் தேவையை கருத்தில் கொண்டு பழைய, புதிய மருத்துவ மனைகளில் உணவக வசதி செய்து கொடுக்க வேண்டும், எப்.எம்.ஏ. பெறுபவர் களுக்கு 28 வகையான நாள்பட்ட நோய்களை பட்டியலிட்டு சிகிச்சை வழங்க வேண்டும், புற நோயாளிகள் (ஓபி) சீட்டு வழங்க கூடுதல் கவுண்டர்களை உருவாக்க வேண்டும், மருத்துவமனையில் உள்ள காலியிடங்களை நிரப்பி, சிகிச்சையை விரைவுபடுத்த வேண்டும், நோயாளிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும், வார்டுகளில் உள்ள காலாவதியான கட்டில், படுக்கை விரிப்புகளை மாற்றி  புதிதாக அமைக்க வேண்டும், நோயாளி களின் உதவியாளர்களுக்கு இரவில் தங்குவ தற்கு கூடுதல் ஓய்வறை, கழிவறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. அபிமன்யு தலைமை யில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்,  ஆர்.இளங்கோவன், ஏ.முருகேசன், எம்.ஆர்.சங்கரன் (டிஆர்பியூ), வி.அரிலால், வெங்கட் ராமன், பேபி ஷகிலா (டிஆர்இயூ) ஆகியோர் பேசினர்.