விழுப்புரம், மார்ச்.3- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பனப்பயிரை விற்பனைக்கு எடுத்து வந்த விவசாயியை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஆர்டி.முருகன் விடுத்துள்ள அறிக்கையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அன்றாடம் அதிக அளவில் நெல், உளுந்து, மணிலா போன்ற விளைப் பொருட்களை விவசாயிகள் விற்ப தற்காக எடுத்து வருகின்றனர். குறிப்பாக அறுவடை காலங்களில் அதிக அளவில் வேளாண் பொருட்கள் வரு வது வாடிக்கையாகும் . ஆனால் உடனுக்குடன் எடை போடாமலும் விலை நிர்ண யம் செய்யாமல் ஏலம் நடை பெறுவதில் தாமதமும் ஏற்படு வது ஆண்டுதோறும் நடை பெற்று வருகிறது. இதனால் விவ சாயிகள் பெருமளவு இன்னலுக்கு ஆளாகி வருவதுடன் இரண்டு நாட்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலேயே காத்திருக்க வேண்டிய அவல நிலை தொடர்ந்து நீடிக்கிறது, இது சம்பந்தமாக தமிழகமுதலமைச்சரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி மேல்மலையனூர் வட்டம், பெரிய நொளம்பை கிராமத்தைச் சேர்ந்த பாண்டி யன் என்கிற விவசாயி 9 சிப்பம் (மூட்டை) பனிப்பயிர் விற்ப தற்காக செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்திருந்தார். அதை 29ஆம் தேதி எடை போட்டு இரவு 8 மணி வரை சாக்கு மாற்றாமல் இருந்ததால் மறுநாள் வெள்ளிக் கிழமை வந்து பார்த்தபோது சாக்கு காணாமல் போனது. இது குறித்து கேட்டபோது, ஜோதி முருகன் என்பவர் கையில் வைத்திருந்த இரும்பு படியால் விவசாயி பாண்டியன் தலையில் கடுமையாகத் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். இச்சம்ப வம் விவசாயிகளை அச்சுறுத்தி கொலை வெறி தாக்குதல் நடத்து கிற இப்படிப்பட்ட சம்பவத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது இந்த பிரச்சனையில் காலம் தாழ்த்தா மல் காவல்துறை முறையான விசாரணை செய்து , கொலை வெறி தாக்குதல் நடத்தியவர் மீது உரிய குற்ற வழக்கை பதிவு செய்யவேண்டும், மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காத வாறு மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் முறை கேட்டை தடுப்பதற்கும் எடை போடும் முறையை மாற்றி அமைத்து கணினி மூலம் எடை போடும் முறையை கொண்டு வந்து விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திட வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் கேட்டுக்கொள்வ தாக அந்த அறிக்கையில் தெரி வித்துள்ளார்.