திருவள்ளூர், பிப்.1- மீஞ்சூர் அருகில் உள்ள வாயலூர் பகுதிகளில் வடசென்னை அனல்மின் நிலையம் அலகு 4- ல் 1320 மெகாவாட் மின் உற்பத்திக் கான திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ள பெல் நிறுவனம் வேறொரு நிறுவனத்திற்கு சப் கான்ட்ராட் விட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் பணி யாற்றி வரும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு ஊதியம் சரியாக வழங்கப்படுவ தில்லை. வேலையை விட்டு நீக்குவது, தொழிலாளர்க ளின் பணி பாதுகாப்பு கவசங் களை வழங்குவதில்லை என்கிறார்கள். தமிழ்நாடு அரசின் சட்டபடி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஊதியமாக ரூ.876 வழங்க வேண்டும். ஆனால் வெறும் ரூ.440 தான் ஒப்பந்தாரர் வழங்குவதாக இதனை தொழிலாளர் துறை கண்டு கொள்ளாமல் உள்ளது. தற் போது 12 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளனர். அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். 5 மாத சம்பள பாக்கியை வட்டியுடன் வழங்க வேண்டும், வடசென்னை அனல் மின் நிலைய நிர்வா கம் பொறுப்பேற்று பெல் நிறுவனத்திடமிருந்து ஊழியர்கள் சம்பள பாக்கியை பெற்றுத்தர வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி மீஞ்சூர் பொது தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் புதனன்று (ஜன 31), மீஞ்சூர் அருகில் உள்ள ஊரணம்பேடு கிராமத்தில் இந்தப் போராட்டம் நடை பெற்றது. இதில் மீஞ்சூர் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜி.விநாயக மூர்த்தி தலைமை தாங்கி னார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், துணை நிர்வாகிகள் சதீஷ், கமலேஷ், பாலசுப்பிர மணியம், சீனிவாசன் உட் பட பல கலந்து கொண்ட னர்.