விழுப்புரம், டிச.29- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 100 நாள் வேலையை 200 உயர்த்து வதுடன் கூலியை ரூ. 600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட 10 ஆவது மாநாடு கண்ட மங்கலத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன் தலைமை தாங்கினார். மாநாட்டின் வரவேற்பு குழு செயலாளர் கே.குப்புசாமி வரவேற்றார். முன்னதாக மாவட்டக் குழு உறுப்பினர் பி. ராஜேந்திரன் செங்கொடியை ஏற்றிவைத்தார். மாநில துணைத் தலைவர் அ.து.கோதண்டம் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, பொரு ளாளர் கே.உலகநாதன் இரு வரும் அறிக்கைகளை சமர்ப்பித்த னர். அகில இந்திய வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் ஆர்.ராம மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் என்.சுப்பிரமணியன், விவசாயத் தொழிலாளர் சங்க புதுச்சேரி மாநிலச் செயலாளர் தமிழ் செல்வம், சுமைப்பணி தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் பி.குமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.தாண்ட வராயன், மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் வி.அமிர்தலிங்கம் மாநாட்டை நிறைவு செய்து உரை யாற்றினார். மரக்காணம் வட்டத்திற்குட் பட்ட அனு மந்தை கிராமத்திலுள்ள இந்து ஆதியன் பழங்குடி இன 20 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், மாவட்டத்தில் குளம், ஏரி, பாட்டை புறம்போக்கு நிலங்க ளில் குடியிருந்து வரும் விவ சாயத் தொழிலாளர்களின் நிலத்தை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். வீடு மனை இல்லாதவர்களுக்கு தரிசு நிலத்தை கையகப்படுத்தி 3 செண்ட் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், நிறுத்தப் பட்டுள்ள முதியோர் உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 23 பேர் கொண்ட மாவட்டக் குழுவுக்கு தலைவராக வி. அர்ச்சுணன், செயலாளராக கே.சுந்தரமூர்த்தி, பொருளாளராக ஜி.ராஜேந்திரன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப் பட்டனர்.