districts

img

ஸ்டாலின் நகர் இஸ்லாமியர்களுக்கு பட்டா அம்பேத்குமார் எம்எல்ஏ உறுதி

திருவண்ணாமலை,ஆக.11-

      திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி தாலுகா, காரம் ஊராட்சிக்கு உட்பட்டது மாலையிட்டான் குப்பம் கிராமம். இங்கு பாய் நெசவு, கோரை சாயம் போடுதல் மற்றும் கூலி வேலைகளில் இஸ்லாமிய குடும்பத்தினர் பல ஆண்டு காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    பல குடும்பங்கள் வீடு இல்லாமல் தவித்து வந்தது. இதையடுத்து, ஊராட்சி மன்ற தீர்மானத்தின் படி ஊருக்கு வெளியே, தரிசு நிலத்தில் குடிசை கட்டி குடியிருந்து வருகின்றனர். 2022  ஆம் ஆண்டு முதல், முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் நகர் ஏற்படுத்தப் பட்டு அதில்  சுமார் 35 முஸ்லிம் குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். வீட்டுவரி செலுத்தி வருகிறார்கள். ஆதார், ரேசன் அட்டைகளையும் பெற்றுள்ளனர்.தங்கள் வசிப்பிடங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி இந்த மக்கள், வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார்,  மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரி களிடம் முறையிட்டுள்ளனர்.  

    இதுவரை பட்டா கிடைக்காத நிலை யில் கடந்த செவ்வாயன்று (ஆக.8) 16 குடிசை வீடுகள் தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. இந்நிலையில், வெள்ளியன்று (ஆக.11) சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார், திமுக மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தரணி வேந்தன், நகர செயலாளர் தயாளன் உள்ளிட்டோர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிவாரண நிதி வழங்கினர்.  

     அப்போது, மாவட்ட நிர்வாகத்திடம் பேசி,  பட்டா கிடைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் அப்துல் காதர், சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் யாசர் அராபத், ஷேக் இஸ்மாயில், ஷரிப் ஆகியோர் உடனிருந்தனர்.