districts

பாதயாத்திரை நாளை துவக்கம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை, ஏப்.9- பெட்ரோல், டீசல் விலை யைக் குறைக்கவும், ஜிஎஸ்டி  வரம்பிற்குள் வரி விதிப்பை கொண்டு வரவும் ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஏப்ரல் 11 ஆம் தேதி  கோவையில் இருந்து சென்னை நோக்கி பாத யாத் திரை துவங்குகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- பாஜக ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத நடவடிக் கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றது. இத னால் விலைவாசி உயர்வு, விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உற்பத்தி முடக்கம், வேலை இழப்பு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் என தொடர்ந்து கடுமையான பாதிப்புக ளுக்கு மக்கள் உள்ளாகி வரு கிறார்கள். மேலும் வறுமை யில் வாடுகிற மக்களின் எண் ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. அதேபோல, சமையல் எரிவாயு சிலிண்டரும் உயர்ந்துள்ளது.வரலாறு காணாத விலையிலிருந்து மக்களை மீட்பதற்கான எந்த  தீர்வையும் காண மோடி அரசு தயாராக இல்லை. எனவே, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்து கின்ற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறை தலைவர் மகாத்மா சீனிவாசன் தலைமையில் ஏப்ரல் 11 ஆம் தேதி திங்கட் கிழமை காலை 10 மணிக்கு கோவை ரெட்கிராஸ் மாளிகை அருகிலிருந்து சென்னை நோக்கி பாத யாத்திரை புறப்படுகிறது. செல்லும் பகுதிகளில் கட்சி யினரும் பொது மக்கள் பேரா தரவையும், ஒத்துழைப்பை யும் வழங்க வேண்டும், இவ்வாறு தெரிவித்திருக் கிறார்.