விழுப்புரம், ஜூன் 8-
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டாட்சியர் அலு வலகத்தில் வரு வாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி தொடங்கியது.
தனித்துணை ஆட்சியரும், மாவட்ட ஜமா பந்தி அலுவலருமான விசு வநாதன் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். வட்டாட்சியர் மெகருன்னிசா வரவேற்றார். ஒன்றிய குழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிகுமார், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலை வர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல் நிகழ்ச்சியாக அகலூர், முக்குணம், தாமனூர், சின்னகரம், அருகாகூர், பணப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது. பென்னகர் உட்பட 20 கிராமங்களின் கணக்குகள் சரி பார்க்கப்பட்டு பொது மக்களிடம் மனுக்கள் பெறப்படவுள்ளன. ஜமா பந்தி வருகிற 16 ஆம் தேதி வரை நடை பெறுகிறது.