பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வட்டம் ஆதிதிராவிடர் காலனி 15ஆவது தெரு, மகாலட்சுமி நகர் பிரதான சாலை, சண்முகபுரம் 7ஆவது தெரு ஆகிய இடங்களில் தெரு விளக்குகள் அமைக்கும் பணியை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், துவக்கி வைத்தார். ஆய்வாளர் பால் ஆண்ட்ரூஸ், மகாலட்சுமி நகர் பொருளாளர் குப்பன், சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர் வெங்கட்டையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.