districts

img

காமாட்சி நினைவு மருத்துவமனையில் பார்கின்சன் ஆதரவு குழு தொடக்கம்

சென்னை, செப்.24- பார்கின்சன் (Par kinson) நோயுடன் போராடும் நபர்களுக்கு விரி வான சிகிச்சை அளிப்பதில் குறிப்பிடத்தக்க ஒரு படியாக, சென்னை - பள்ளிக் கரணையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை பார்கின்சன் ஆதரவு குழுவை தொடங்கி யுள்ளது.  பார்கின்சன் எனப்படும் நாள்பட்ட நரம்பியல் சிதைவுக் கோளாறானது, இந்தியாவில் உள்ள முதி யோர்களில் கணிசமா னோரை பாதிக்கிறது. ஒரு லட்சத்திற்கு 80 பேர் வீதம் இதனால் பாதிக்கப்படு கிறார்கள். மூத்த நரம்பியல் நிபுணரான டாக்டர் ராஜேஸ்வரி ராமச்சந்திரன், “இந்த நோய் நிலை நாள்பட நாள்பட மோசமாகும். எனவே, ஆரம்ப காலத்தி லேயே பல துறை சார்ந்த அணுகுமுறை மூலம் தலையீடு செய்வது முக்கிய மானது” என்று வலியுறுத்தி னார். பார்கின்சன் ஆதரவு குழுவின் தொடக்க விழா அண்மையில் நடை பெற்றது. நரம்பியல் நிபு ணர்கள், மனநல மருத்துவர், பிசியோதெரபிஸ்ட், தொழில் சார்ந்த சிகிச்சை நிபுணர், பேச்சு சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட பல தரப்பட்ட நிபுணர்களின் முன்னிலை வகித்தனர். நிபு ணர்களுடன் ஒரு கேள்வி பதில் அமர்வும் நடை பெற்றது. இந்த விழாவில் மருத்துவமனையின் நிதி மற்றும் செயல்பாடுகள் பிரிவு இயக்குநர் டாக்டர் டி.ஜி.சிவரஞ்சனி மற்றும் மருத்துவமனை தலைவர் டாக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டனர்.