districts

சென்னை முக்கிய செய்திகள்

தங்க சாலையில் மியாவாக்கி காடுகளுடன் பூங்கா

சென்னை, அக். 19- வடசென்னை பகுதியில் உள்ள மின்ட் தெரு எனப்படும் தங்க சாலை பகுதியின் நடுவே மியாவாக்கி காடுகள், மீன் நீரூற்று, கூழாங்கல் நடைபாதை மற்றும் மூலிகை தோட்டம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 3.7 ஏக்கர் பரப்பளவில் சுமார் 4.5 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு அந்த இடம் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணை யர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், அங்கு குழந்தைகளுக்கு விளையாடும் பகுதி மற்றும் பொதுமக்களுக்கு உடற்பயிற்சி கூடம் ஆகியவை அமைக்கப்பட்ட பின்னர் பொது மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் எனத் தெரி வித்தார். வடசென்னை பகுதியில் பூங்காக்கள் மற்றும் பொழுது போக்கு இடங்கள் குறைவாகவே உள்ளது. எனவே மின்ட் மேம்பாலத்திற்கு அடியில் இருந்த இந்தப் பகுதியை தேர்வு செய்து அங்கு பொதுமக்களின் பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக பூங்கா அமைத்துள்ளோம் அந்தப் பூங்காவில் மினி ஆணிடோரியம் அமைத்து அங்கு தனியார் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடவும் குடிமை அமைப்பு திட்டமிட்டுள்ளதாவும், இது அருகில் வசிக்கும் மக்களுக்கு பயனுள்ளதாகவும் மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டவும் உதவும் என்றும் ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அந்த பூங்காவில் அமையப்போகும் ஆடிட்டோரியத்தில் 60 முதல் 70 பேர் வரை தங்கலாம் என்றும், ராயபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா பூங்கா, பெரம்பூரில் உள்ள முரசொலி மாறன் பூங்காவை அடுத்து மின்ட் பகுதியில் உள்ள பூங்கா 3ஆவது பெரிய பூங்காவாக இருக்கும் என்றும், வடசென்னை பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம் ஆகியவற்றுடன் இந்த பூங்கா போக்குவரத்து இணைக்கப்படும் என்றும் கூறினார். இதுகுறித்து ஒப்பந்ததாரர் கூறுகையில், அந்த பூங்காவில் மாநகராட்சி சார்பில் கார் பார்க்கிங் வசதிக்காக அதிகளவில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், படகு வடிவத்தில் பூங்கா முன்பு அடையாளம் வைக்கப்படும் என்றும் கூறினார்.

சென்னை மெரினாவில்  சுழல் காற்று வீசியது ஏன்?

சென்னை, அக். 19- சென்னை மெரினாவில் சுழல் காற்று வீசியது ஏன்? என்றும் சென்னையில் பெய்த மழை அளவு என்ன? என்பது குறித்தும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். சென்னையில் மெரினாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்று வீசியது. இதில் மக்கள் அலறி அடித்து ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் இது தொடர்பாக சென்னையில் வியாழனன்று (அக். 19) விளக்கமளிளித்தார். இதுதொடர்பாக வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது: சென்னை மெரினா கடற்கரையில் சூறாவளி காற்று தொடர்பான வீடியோவை நாங்கள் பார்த்தோம். ஆனால் அதன் அளவு குறித்து இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. எதிர் எதிர் காற்றுகள் ஒன்றுடன் ஒன்று வேகமாக வீசிய போது குறுகிய பகுதியில் சூறாவளி காற்று வீசி இருக்கலாம். பரந்த மணல் வெளியில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே அந்த சுழல் காற்று வீசியுள்ளது. எனவே அதுகுறித்த டேட்டா எங்களிடம் இல்லை என்று அவர் கூறினார்.

ஐஸ்அவுசில் பிடிபட்ட 30 மாடுகள்

சென்னை, அக்.19- ஐஸ்அவுஸ் பகுதியில் முதியவரை மாடு முட்டி தள்ளிய சம்பவம் நடைபெற்றுள்ளது. அதே பகுதியில் ஏற்கெனவே போலீஸ்காரர் உள்பட 6 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு முட்டி காயப்படுத்தியது. இதை யொட்டி ஐஸ்அவுஸ் பகுதியில் மாநகராட்சி அதிகாரி களும் ரோந்து சென்று ரோட்டில் சுற்றித்திரிந்த மாடு களை பிடித்துள்ளனர்.  புதனன்று  30 மாடுகள் பிடிக்கப் பட்டுள்ளன. மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது.

மீஞ்சூரில் வாலிபர் படுகொலை

திருவள்ளூர், அக்.19- மீஞ்சூர் ராமரெட்டிபாளையம் ஏரிக்கரை அருகே மது அருந்தும் போது நண்பர்க ளுக்கிடையே ஏற்பட்ட தகராறில் அஜீத் (25) என்ற இளைஞர் வெட்டி கொலை படுகொலை செய்யப்பட்டார். பின்னர் அவரது கை, கால்களை துணியால் கட்டி உடலை கிணற்றில் வீசியுள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, நாகராஜ், கார்த்திக் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையில் தொடர்புடைய மோகன், சாய், கணேஷ் சந்தேகத்துக்கிடமான வசந்தகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

சாலை விபத்தில் 6 பேர் காயம்

விழுப்புரம், அக்.19- சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி அரசு விரைவு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை வேடசந்துார் வட்டம் தன்னம்பட்டியை சேர்ந்த வெங்கடாஜலபதி (43) என்பவர் ஓட்டி வந்தார். புதன்கிழமை இரவு விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பேருந்து திடீரென நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது . இதில் பேருந்தின் முன்பக்கம் நொறுங்கியது. இதில் பேருந்து ஓட்டுநர் வெங்கடாஜலபதி, பயணிகள் மணிவேல் (31), காமேஸ்வரி (36) திண்டுக்கல் திருஞானஅருள், (63) சீர்காழி பாஸ்கர் (72) நந்தவனபட்டி காசிநாதன் (40) உட்பட 6 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பழங்குடியினருக்கு அரசு சிமெண்ட் வழங்க கோரிக்கை

திருவண்ணாமலை, அக். 19- பழங்குடியினருக்கான வீடு கட்டும் திட்டத்திற்கு அரசு சிமெண்ட் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின்  சார்பில், தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.   இதுகுறித்து கட்சியின் பெரணமல்லூர் ஒன்றியச் செயலாளர் ந.சேகரன் அனுப்பியுள்ள கடிதத்தில், ஒன்றிய அரசின் பிரதமர் வீடு கட்டும் திட்டம், பழங்குடியினருக்கான வீடு கட்டும் திட்டம், பசுமை வீடு திட்டம் போன்ற திட்டங்களில் ஏழை எளிய மக்களுக்கு, குறிப்பாக பழங் குடியினர் மற்றும் பட்டியலின மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அரசு வீடுகள் கட்ட இதுநாள் வரை  டான்செம் மூலம் அரசு சிமெண்ட் மலிவு விலையில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக டான்செம் மூலம் அரசு சிமெண்ட் வராததால் மேற்கண்ட திட்டங்கள் மூலம் கட்டப்படும் வீடுகளின் கட்டுமானப் பணிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் பயனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக பட்டியலின பழங்குடியினர் அதிக விலைகொடுத்து வெளிச் சந்தையில் சிமெண்ட் வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் மூன்று ஆண்டுகளாக மந்த நிலையில் நடை பெற்று வரும் வீடுகள் கட்டும் பணிகள் மேலும் தேக்கமடைந்துள்ளன. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இந்த பிரச்சனையில் தலையிட்டு டான்செம் மூலம் ஊராட்சி ஒன்றியங்கள் கோரிய  சிமெண்ட் மூட்டைகள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.