districts

img

உலக முதலீட்டாளர் மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய மாதிரி வடிவம்

சென்னை, ஜன. 7- உலக முதலீட்டாளர் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையத்தின் மாதிரி வடிவம் காட்சி ப்படுத்தப்பட்டுள்ளது. மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம் பரபரப்பு மிகுந்த விமான நிலையங்கள் ஒன்றாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி வருவதால்  சென்னைக்கு வெளியே புறநகர் பகுதியில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப் பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் பரந்தூரில் சுமார் 3,800 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் மற்றும் ஏகனா புரம் மற்றும் அதன் சுற்றியுள்ள 16 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று வரை பரந்தூர் புதிய விமான நிலை யத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், முன்பு எடுக்கப்பட இருந்த நிலத்தை விட கூடுதல் நிலத்தை கையகப் படுத்த அரசு முடிவு செய்துள்ளது குறிப்பி டத்தக்கது. மேலும் நிலம் கையகப்படுத் துவதற்கான அரசாணையும் வெளியிடப் பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை நந்தனம்  வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2 நாள் நடத்தப்படுகிறது. மாநாட் டிற்கு வரும் விருந்தினர்களை கவரும் வகையில் அரங்கத்தில் தமிழர்களின் பெரு மையை போற்றும் வகையில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிதாக அமைக்கப்பட உள்ள பரந்துர் விமான நிலையத்தின் மாதிரி வடிவம் முதன்முறையாக உலக முதலீட்டா ளர்கள் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட் டுள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள பரந்தூர் விமான நிலையத்தின் மாதிரி வடிவம் முதல் முறையாக தற்போது வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.