மக்களவைபொதுத் தேர்தலை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், நூறு விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருபெரும்புதூர் தேர்தல் பார்வையாளர் (காவல்) பரத் ரெட்டி பொம்மா ரெட்டி தலைமையில் துணை ராணுவ படை மற்றும் காவல் படை சார்பில் ஆயுதம் ஏந்திய அணிவகுப்பு ஊர்வலம் செங்கல்பட்டு நகர முக்கிய வீதிகளில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி. சாய் பிரனீத், துணை ஆட்சியர் நாராயண சர்மா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.