பன்னியாண்டி சமூக மக்களுக்கு சாதிச் சான்று வழங்க மறுக்கப்படுவது குறித்தும், பன்றி வளர்க்க அடிக்கடி தடை விதிப்பது குறித்தும், இதற்கு உரிய தீர்வு காண வேண்டியும் பன்னியாண்டிகள் சமூக நல சங்கத்தின் மாவட்டத் தலைவர் சீனிவசன், செயலாளர் தாமோதரன், பொருளாளர் ராஜா ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் மனு அளித்தனர். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், மயில்வாகணன், வெங்கடேஷ், எல்லப்பா, மாதையன் ஆகியோர் உடன் இருந்தனர்.