திருவண்ணாமலை அடுத்த துர்க்கை நம்மியந்தல் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடம் மற்றும் சமையலறை கூட்டத்தினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.