விழுப்புரம்,டிச.4- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட வாக்கூர் நடுநிலைப்பப் ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்த தாக அப்பள்ளி ஆசிரியர் கருணாகரன் என்ப வர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்நிலையில் இந்த ஆசிரியர் குற்ற மற்றவர் என்றும், பள்ளியில் உள்ள ஈகோ வால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார், அதனால் அவர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் என அக்கிராம மக்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட் டம் நடத்தி, முறையிட்டனர்.மேலும் மாண வர்கள் 3 ஆம் தேதி வரை பள்ளிக்கு அனுப்பா மல் பெற்றோர்கள் நிறுத்தி வைத்து உள்ளனர். இந்நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட 13 குழந்தைகளின் பெற்றோர் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் மாவட்ட ஆட்சி யர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பா ளரை சந்தித்து, தாங்கள் கொடுத்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக எழுதி கொடுக்கச் சென்றனர். அவர்களிடம் ஆட்சியர் பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் ஆகி யோர் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இனிமேல் இந்த வழக்கு குறித்து நீதிமன்ற விசாரணையில் தான் முடிவு தெரியும். நாங்கள் யாரும் அது பற்றி முடிவு செய்ய முடியாது. ஆகையால் கிராம பொதுமக்கள் பள்ளி மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அனைவரையும் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கிராமத்திற்கு வந்த அவர்கள், கிராம பஞ்சாயத்தார் மற்றும் மற்ற பெற்றோர்களுடன் கலந்தாலோசித்த னர். இதில் டிசம்பர் 4 ஆம் தேதி திங்கட் கிழமையில் இருந்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். மேலும், நீதிமன்ற விசாரணையின் போது பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தனர். இந்த முடிவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாக்கூர் கிராம மக்கள் அனுப்பி வைத்தனர். இதனால் கடந்த ஒரு வாரமாக நடந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள் ளது.மேலும் திங்கள் கிழமை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் நிலை யில் புயல் காரணமாக மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.