சென்னை,ஆக.1-
சென்னை, அடுத்த மணலியில் ஆண்டார்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீஞ்சூர், மணலி தீயணைப்பு துறையினர் விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சில மணி நேரம் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்திருந்தது.