கடலூர், ஆக. 23- வேளாங்கண்ணி மாதா கோவில் விழாவிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பாத யாத்திரையாக செல்கின்றனர். கடலூர் வழியாக செல்பவர்களுக்கு உழவர் சந்தை அருகே கடலூர் மாவட்ட சிறுபான்மை நல குழு சார்பாக மாவட்டத் தலைவர் எஸ்.கே.பக்கிரான் தலைமையில் ஆயிரம் பேருக்கு குடிநீர் பாட்டில் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்டச் செயலாளர் ஆர். அமர்நாத், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநகர செயலாளர் எஸ். தமிழ்மணி, கருணாகரன், கட்டுமான சங்கத்தின் பூபதி, கடலூர் வணிகர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் வி. சதிஷ், நகர இணை செயலாளர் பி. சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.