காஞ்சிபுரம், நவ 25 - வாச்சாத்தி கிராம மக்கள் மீது நடந்த வன்கொடுமையை எதிர்த்து 30 ஆண்டுகால இடைவிடாத போராட்டத்தினால் குற்ற வாளிகளுக்கு உரிய தண்டனை நீதிமன்றத்தின் மூலம் கிடைத்துள்ளது. இந்த வாச்சாத்தி வழக்கு வெற்றி விழா பொதுக்கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் காஞ்சிபுரம், காந்தி ரோடுட்டில் உள்ள பாபு தனி யார் மண்டபத்தில் விழாய னன்று (நவ.23) நடை பெற்றது. இந்த கூட்ட த்திற்கு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.முருகேசன் தலைமை வகித்தார். இதில் உரையாற்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் வாச்சாத்தி தீர்ப்பு எளிய மக்களிடம் கொண்டு சேர்ப்பது தலையாய கடமை என எடுத்துரைத் தார். வாச்சாத்தி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் இடைவிடாத சட்டப் போராட்டம்தான் குற்றவாளி களுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுத்தது என்றும் ஆளு கிறவர்கள், அரசு அதிகாரி களின் அடக்கு முறைகளை எளிய மக்களின் போராட்டம் மூலம் செங்கொடி இயக்கம் அவ்வனைத்தையும் தவிடு பொடியாகிவிடும் என அவர் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் கே.நேரு, தலைவர் என்.சாரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.