திருவள்ளூர், அக் 18- சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்காக நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கு 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் மற்றும் நியாயமான இழப்பீடு சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலை வர் பெ.சண்முகம் வலி யுறுத்தியுள்ளார். சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு (NH-205), சாலை அமைக்க நிலங்களை வழங்கிய விவ சாயிகளுக்கு உரிய இழப்பீட்டை மாவட்ட ஆட்சி யர் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (அக் 18), திருவள்ளூர் டோல்கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என். ஸ்ரீநாத் தலைமை தாங்கி னார். இதில் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம் பேசுகையில் சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு 2010-14 ஆம் ஆண்டில் விளை நிலங்களை கையகப்படுத்தி 15 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் இழப்பீடு வழங்காதது யாருடைய தவறு. 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நியாயமான இழப்பீடு சட்டத்தின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டுமே தவிர, பழைய சட்டங்களை காரணம் காட்டக்கூடாது. 15 ஆண்டுகளுக்கான வட்டி யுடன் கூடிய இழப்பீடு வழங்கவேண்டும். யாரும் அநியாயமாக கேட்க வில்லை. ஒரு பகுதி விவ சாயிகளுக்கு மட்டும் அதுவும் கமிஷன் கொடுத்த விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீடு வழங்கிவிட்டு, பெரும்பாலான விவ சாயிகளுக்கு இழப்பீடு வழங்க மறுப்பது சட்டப் படி குற்றமாகும். இதற்கு முழுக்க காரணம் மாவட்ட ஆட்சியர் தான் பொறுப்பேற்க வேண்டும். இதில் தவறு இழைத்த அதிகாரிகள் மீது தற்போதுள்ள மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ் சாலைக்கு நிலங்களை வழங்கிய விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண விவசாயிகள் ஒன்று பட்டு போராடினால் தான் வெற்றி பெற முடியும் என்றார். நவ 6 ல் விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு. திருவள்ளூர் மாவட்ட த்தில் நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகள் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தி வரு கின்றனர். இதனால் விவ சாயிகளுக்கு எந்த பாது காப்பும் இல்லாத சூழ்நிலை உள்ளது. இதனை தொடர்ந்து நவ 6-ல் திருத் தணியில் விவசாயிகள் பாது காப்பு மாநாடு நடை பெற்ற உள்ளதாக விவசாயி கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.துளசி நாராயணன் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் சி.பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்சல்அகமது, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் கோட்ட செயலாளர் பி.நேதாஜி ஆகியோர் பேசினர்.
விவசாயிகளிடம் கமிஷன் வாங்கிய முன்னாள் ஆட்சியர் சுந்தரவல்லி
அரசு விசாரணை நடத்த கோரிக்கை தமிழ்நாடு முழுவதும் நிலம் சம்பந்தமாக நூற்றுக்கணக்கான பிரச்சனைகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலையிட்டு இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே மாவட்ட ஆட்சியராக இருந்த சுந்தரவல்லி சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அமைக்க நிலங்களை வழங்கிய விவசாயிகளில் 30 விழுக்காடு கமிஷன் கொடுத்தவர்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கியுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மாவட்ட ஆட்சியரே தரகர்கள் மூலம் கமிஷன் பெற்றுக்கொணடு இழப்பீடு வழங்கியிருப்பது அயோக்கியத் தனமானது. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் முன்னாள் ஆட்சியர் சுந்தரவல்லி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பதற்கு எந்த ஒரு தகுதியும் அவருக்கு இல்லை. இது குறித்து தமிழ்நாடு அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு கமிஷன் வாங்கியது உண்மை என தெரிய வந்தால் சுந்தரவல்லியை பணி நீக்கம் செய்ய வேண்டும். இப்படி அதிகாரிகள் இருந்தால் எவ்வளவு அத்தியாவசியமான, நல்ல திட்டமாக இருந்தாலும் விவசாயிகள் எப்படி நிலத்தை வழங்க முடியும். விவசாயிகளிடமிருந்து பறித்த முழுத் தொகையும் சுந்தரவல்லியிடமிருந்து திரும்ப பெற வேண்டும். (பெ.சண்முகம் பேசியதிலிருந்து)