வந்தேபாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில் உற்பத்தி மற்றும் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் வழங்குவதைக் கண்டித்து டிஆர்இயூ சார்பில் பெரம்பூரில் புதனன்று (ஜன. 10) ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், சங்கத்தின் செயல் தலைவர் அ.ஜானகிராமன், பொருளாளர் எதுகிரி, ஆர்.இளங்கோவன், முருகேசன் (டிஆர்பியூ), எஸ்.ராமலிங்கம், பா.ராஜாராமன், சத்தியமூர்த்தி (ஐ.சி.எப். யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஷாப் மெயின் கேட்டிலிருந்து பெரம்பூர் ரயில் நிலையம் வரை ஊர்வலம் நடைபெற்றது.