சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி கிருஷ்ணதாஸ் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியவில்லை. இருசக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே உடனடியாக கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.