districts

அரசு மருத்துவர்களுக்கான அரசாணை 354 ஐ அமல்படுத்த முதல்வருக்கு கோரிக்கை

சென்னை,ஏப்.8- அரசு மருத்துவர்களுக்கான அரசாணை 354 ஐ அமல்படுத்த வேண்டுமென்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மரு. எஸ். பெருமாள்பிள்ளை  கேட்டுக்கொண்டுள்ளார்  இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் நடந்த மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை விவாத்தின்போது பேசிய  மருத்துவர் எழிலன் (திமுக), எம்.சின்னத்துரை (சிபிஎம்) இருவரும் அரசாணை 354 ஐ அமல்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார்கள். இருப் பினும் இன்று வரை அரசு மருத்துவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. பொதுவாக எந்த வேலை செய்வதாக இருந்தாலும் மன நிம்மதியுடன் பணியாற்ற வேண்டும். அப்படியிருக்க நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் உயிர்காக்கும் மருத்துவர்களை தங்கள் சம்பளத்திற்காக வருடக்கணக்கில் போராட வைப்பதை, நம் முதல்வர் நிச்சயம் விரும்ப மாட்டார்கள் என்று நாம் நம்புகிறோம். மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்து வர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட 40 ஆயிரம் ரூபாய் குறைவாக, இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது. அதுவும், சுகாதாரத் துறையில் பல்வேறு திட்டங்களுக்காக அரசு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் செலவிடுகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறையின் இதய மாக உள்ள அரசு மருத்துவர்களின் சம்பளத் திற்காக, அதுவும் ஆண்டுக்கு  கூடுதலாக  வெறும் 300 கோடி ரூபாயை ஒதுக்க மறுப்பதை, தமிழக முதல்வர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என நம்புகிறோம். இதுவரை கலைஞர் பெயரில் எத்தனையோ திட்டங்களை அறிவித்து உள்ளார்கள். ஆனால் நீண்டகாலமாக அரசு மருத்துவர்கள் எதற்காக இங்கு போராடி வருகிறார்களோ, அந்த கலைஞரின் அரசாணை 354 ஐ அமல்படுத்துவோம் என்றும் அரசு மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு உடனடியாக  வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏப்ரல் 18 அன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்  சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின் போது முதல்வர் அறிவிப்பு வெளியிட்டால், மருத்துவர்கள் இன்னும் மிகுந்த  துடிப்போடும், உற்சாகத்துடனும் பணியாற்றுவார்கள் என்று அந்த அறிக்கை அவர் தெரிவித்திருக்கிறார்.