புதுச்சேரி, டிச.1- புதுச்சேரியில் ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இணையவசதி துவக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசும், புதுச்சேரி என்.ஆர் காங்கி ரஸ், பாஜக கூட்டணி அரசு புதுச்சேரி மின்துறை தனியாருக்கு விற்பனை தீவிரமாக முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்த திட்டமிட்டு வருகிறது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை கைவிட கோரி “நமது மின்சாரம் நமது உரிமை” என்ற முழக்கத்தோடு புதுச்சேரியில் இயக்கம் தொடங்கி நடை பெற்று வருகிறது. இந்த கையெழுத்து இயக்கத் திற்கு வலு சேர்க்கும் வகை யில் இணையத்தில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் புதிய வசதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில குழு துவக்கி உள்ளது. புதுச்சேரி மக்கள் இணையத்தில் கையெழுத் திடும் வகையில் https://saveeb.pycpim.in என்ற முகவரியில் இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்ட ப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முதல் கையெழுத்து பதிவிட்டு இணையதளத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப் பினர்கள் கொளஞ்சியப் பன், சீனிவாசன், பிரபுராஜ், மாநிலக் குழு உறுப்பினர் கள் ராகுல், சஞ்சய், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.