districts

img

ஜிப்மர் இயக்குநருக்கு ஓராண்டு பணி நீடிப்புக்கு எதிர்ப்பு

புதுச்சேரி,ஜன.25- ஜிப்மர் இயக்குநருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரி வித்து மருத்துவர்கள் ஊழியர்கள் போராட்டத்தை துவக்கியுள்ளனர். புதுச்சேரியில் இயங்கி வரும் ஒன்றிய அரசு நிறுவனமான ஜிப்மரில் இயக்குநராக பணியாற்றி வருபவர் ராகேஷ் அகர்வால். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிந்தது. புதிய  இயக்குநரை தேர்வு செய்வதற்கான நேர் காணல் நடத்தப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் புதிய இயக்குநர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில், ராகேஷ் அகர்வா லுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளது. ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் பணி காலத்தில் கடும் எதிர்ப்பு ஊழி யர்கள், மருத்துவர்கள் தொடங்கி பொது மக்கள் வரை எழுந்தது.  ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் வரை  அனைவரும் ஒன்றிணைந்து அவரை அழைத்து கூட்டம் நடத்தி உத்தரவுகளை பிறப்பித்தும் அதை முழுமையாக அவர் செயல்படுத்தவில்லை. இந்நிலையில் மீண்டும் அவருக்கு ஓராண்டு பணி  நீட்டிப்பு தந்துள்ளது அங்கு பணியாற்று வோர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜிப்மர் மருத்துவர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் இறங்கி உள்ளனர். முதல் நாளான இன்று அனை வரும் கருப்பு பட்டை அணிந்து பணி யாற்றினர்.  ஜிப்மர் ஊழியர்கள் சங்க தலைவர் ஆரோக்கியம் கலைமதி கூறுகையில், “ஜிப்மர் தன்னாட்சி விதிகளுக்கு புறம்பாக ராகேஷ் அகர்வாலுக்கு ஓராண்டு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு உடனே தலையிட்டு பணி நீட்டிப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.  ஜிப்மர் பேராசிரியர் சங்கத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில், “ஜிப்மர் இயக்கு நராக ராகேஷ் அகர்வால் வந்த பிறகு கல்வித் தரமும் மருத்துவ தரமும் குறைந்து வரு கிறது. ஜிப்மருக்கு வேண்டிய மருந்துகள் வாங்குவது, ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்றவற்றை அவர் தொடர்ந்து தடுத்து வருகிறார். ஜிப்மாரின் தரம் தொடர்ந்து குறை வதால், அவருக்கு பதவி நீட்டிப்பு செய்யக் கூடாது. ஐந்து ஆண்டுகளாக கடுமையான கஷ்டத்தில் இருந்தோம். மீண்டும் ஒரு ஆண்டு பதவி நீட்டித்தால் மருத்துவர்களால் பணியாற்ற முடியாது. அனைவரும் மன  உளைச்சலில் இருக்கின்றனர்” எனத் தெரி வித்தார். மேலும் சங்கத்தினர் நடத்திய பேச்சு வார்த்தை அடிப்படையில், ஜிப்மர் இயக்கு னருக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டதை கண்டித்து தொடர்ந்து பல கட்ட போராட்டங் களை நடத்த போராட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.