மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாதவரம்-செங்குன்றம் பகுதி குழு சார்பில் விநாயகபுரத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை மூத்த தலைவர் ஏ.பி.அன்பழகன் திறந்து வைத்தார். வி.சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு மோர் வழங்கினார். இதில் பகுதிச் செயலாளர் வி.கமலநாதன், வி.சரவணன், பி.கார்த்திக், வெங்கடேசன், கே.கார்த்திக், கிளைச் செயலாளர் வி.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.