கள்ளக்குறிச்சி, மார்ச் 8- கள்ளக்குறிச்சியின் பொதுப்பணித் துறை கோட்ட அலுவலகம் தியாக துருகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரிதிவி மங்கலத்தில் கட்டப் பட்டுள்ளது. இதை பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.