districts

img

வடபழனி ஆற்காடு சாலையில் காவேரி மருத்துவமனை திறப்பு

சென்னை, மார்ச் 20- வடபழனி ஆற்காடு சாலையில் தனது புதிய உயர்நிலை மருத்துவ வளா கத்தை காவேரி மருத்துவ மனை தொடங்கியிருக் கிறது.  பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் தொடக்கவிழா நிகழ்வில் தலைமை விருந்தி னராக கலந்துகொண்டார். மருத்துவமனை நிறுவனர் டாக்டர். எஸ் சந்திரக்குமார், நிர்வாக இயக்குநர் டாக்டர். எஸ் மணிவண்ணன் செல்வ ராஜ், இணைநிறுவனர் டாக்டர். அரவிந்தன் செல்வ ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த புதிய மருத்துவமனையில் 9 உயர்சிகிச்சை நேர்த்தி மையங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.  250 படுக்கை வசதி களைக் கொண்ட இம்மருத் துவமனையில், 75 படுக்கை களுடன் கூடிய உயிர்காக் கும் தீவிர சிகிச்சைப்பிரிவு, 30 படுக்கை வசதிகளுடன் கூடிய உறுப்புமாற்று சிகிச் சைக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் உட்பட அனைத்து வசதிகளும், நவீன சாதனங்களும் இடம் பெற்றுள்ளன.